News February 11, 2026

புதுக்கோட்டை: பேருந்து மோதியதில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதியில் இருந்து மாங்கோட்டைக்கு பைக்கில் நேற்று செல்லக்கண்ணு (47) என்பவர் சென்றுள்ளார். அப்போது, செம்பட்டி விடுதி சாலையில் நாகராஜன் (49) என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து மோதியதில் செல்லகண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் ஜெகதீஸ்வரன் (23) அளித்த புகாரில் செம்பட்டி விடுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 13, 2026

புதுக்கோட்டை: கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அடுத்த கரகத்திக்கோட்டை மஞ்சக்குடி சாலையில் நேற்று இத்ரீஸ் கான் (28), இம்ரான் கான் (30), முகமது அப்துல்லா (28) ஆகிய மூவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 13, 2026

புதுகை: 16-ம் தேதி கடைசி நாள்-கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு கணினி பிரிவு அல்லது 3 மாத கால கணினி பயிற்சி பெற்று ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்ற 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்.16-க்குள் இணை இயக்குநர், தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பூ மாலை வணிக வளாகம், புதுகை-5 என்ற விலாசத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 13, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!