News December 13, 2025
புதுக்கோட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பம் அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் இம்மாதம்(டிச.31) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதை LIKE SHARE பண்ணுங்க.
Similar News
News December 13, 2025
புதுக்கோட்டையில் 28,818 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கல்

புதுகை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பம் செய்திருந்த 59,055 பேரில் தகுதியுள்ள 28,818 பேருக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், நேற்று புதுகையில் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஏடிஏம் கார்டை வழங்கினர். இதில் எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, மா.சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News December 13, 2025
புதுக்கோட்டை மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
புதுக்கோட்டை: தப்பி ஓடிய சிறை கைதியை பிடிக்க 4 தனிப்படை!

கறம்பக்குடியில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கா என்ற இளைஞர், சிறுமி ஒருவரை பாலியல் வண்புணர்வு செய்த சம்பவத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு. சிறையில் அடைக்க அழைத்து சென்றபோது போலீசிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவிட்டாள்ளார்.


