News January 27, 2026
புதுக்கோட்டை: பிடிபட்ட குற்றவாளி – போலீசார் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கோ போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார். அதனைத் ஹொடர்ந்து, புதுகை மத்திய சிறையில் அடைப்பதற்கு அவரை கூட்டி செல்லும் வழியில் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில், தனிப்படை போலீசார் குற்றவாளியை ஒரிசாவில் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 7, 2026
புதுகை: 6 சமத்துவபுரங்களை முதல்வர் ஸ்டாலின் திறப்பு

புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட 6 சமத்துவபுரங்கள் மற்றும் ரூ.1,876 கோடி மதிப்பிலான பல்வேறு துறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 100 வீடுகள் அமைக்கப்பட்டு பல்வேறு சமூகத்தினர் குடியமர்த்தப்படுகின்றனர். சாலைகள் உள்ளிட்ட திட்டங்களும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
News February 7, 2026
புதுக்கோட்டை: கடைசி வாய்ப்பு.. அரசு வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 7, 2026
புதுக்கோட்டையில் 50,590 பேர் பயன்!

புதுகை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 37 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் 50,590 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


