News February 3, 2026
புதுக்கோட்டை: நூதன முறையில் பணம் அபேஸ்!

ஆலங்குடியைச் சேர்ந்த தனசேகரன் (35) என்பவரை கடந்த ஜன.29-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் பிரபல தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நகைக்கடன் குறித்து கேட்டு 16 இலக்க எண், OTPயை கேட்டுள்ளார். அதன் பேரில் இவரும் கூறியுள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.4.70 லட்சம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

புதுகை, வடகாட்டிலிருந்து சவேரியார்பட்டினத்திற்கு நேற்று மைக்கேல் (69), அவரது மனைவி ஆரோக்கியமேரி (55) ஆகியோர் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது சலுவான்விடுதி கிளை சாலையில் எதிரே பைக் ஒட்டி வந்த டென்னிஸ் (35) மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில்மைக்கேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரில் வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 16, 2026
புதுகை: தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம்

2026-2027ம் ஆண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கு https://skilltraining.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வரும் பிப்.28 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News February 16, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


