News December 18, 2025
புதுக்கோட்டை: நாயால் பறிபோன உயிர்

ஆலங்குடி அடுத்த திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2-ம் தேதி ஷாஜகான் (55) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த ஷாஜகான் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
புதுகை மாணவர்களுக்கு நற்செய்தி!

புதுகை மாவட்ட மாணவர்கள் புத்தாண்டை முன்னிட்டு தங்களது புத்தகங்கள், நிலையான தேர்வு தாள்கள், திட்ட சமர்ப்பிப்பு மற்றும் சொந்த உடைமைகளை விரைவு பார்சல் மற்றும் பதிவு பார்சல் அனுப்பும்போது 10% தள்ளுபடி பெறலாம் என தபால் துறை அறிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு வணிக மேம்பாட்டு அலுவலர் நாகநாதன் 9865546641 எண்னை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
புதுகை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News December 27, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய தகவல்

புதுகை மாவட்டத்தில் 17 நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் இதுவரை 37, 822 பேர் பயன் அடைந்துள்ளனர். ஒரு மருத்துவ முகாமில் சராசரியாக 1400 க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேலும் இந்த முகாம்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாடுகள், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிதல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் உள்ளிட்டவை செய்யப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


