News April 12, 2025
புதுக்கோட்டை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News December 25, 2025
புதுக்கோட்டை: இளம்பெண் திடீர் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் அபிநயா (23), TNPSC தேர்வுக்கு படித்து வந்தார். இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய நிலையில், வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 25, 2025
புதுக்கோட்டை: தொடர் திருட்டு – இளைஞர் கைது

விராலிமலை சுற்றுப்பகுதிகளில் வீடு மற்றும் கடைகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை லாபகமாக திருடி வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சிவராஜ் (19) என்ற இளைஞரை விராலிமலை போலீசார் கைது செய்தனர். விராலிமலை பகுதியில் மோட்டார் திருட்டு அண்மை காலமாக தொடர் கதையாக இருந்து வந்த நிலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
News December 25, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


