News October 6, 2025
புதுக்கோட்டை: கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கருத்தங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (60). இவர் நேற்று விராலிமலை அடுத்த கோல்வயலில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக SOC-யில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மலைக்கண்ணு (35) அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
புதுக்கோட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News October 28, 2025
புதுக்கோட்டை: தபால் துறையில் வேலை- ரூ.30,000 சம்பளம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 28, 2025
புதுகை: குடும்ப சண்டையை தடுத்தவருக்கு கத்தி குத்து

விராலிமலை ஒன்றியம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32) நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்து அவரது மனைவி சோபனாவை தாக்கியுள்ளார். அப்போது வந்த சோபானாவின் சகோதரன் மாதவன் சதீஷ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாதவனை சலூன் கடை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருச்சி GH-ல் சேர்த்தனர். மாத்தூர் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


