News October 12, 2025

புதுக்கோட்டை: கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

image

ஆலங்குடி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு மாதா கோவில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் ( 52) தோட்டத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 40 லி சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 6, 2026

புதுக்கோட்டை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 6, 2026

புதுக்கோட்டை: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 6, 2026

புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 – 15 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் எச்.பி.வி தடுப்பூசியினை வழங்கும் முன்னோடி திட்டமானது கடந்த பிப்.28ம் தேதி முதல் துவங்கப்பட்டது. இந்த எச்.பி.வி தடுப்பூசி அனைத்து மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!