News October 6, 2025

புதுக்கோட்டை: ஓடும் பேருந்தில் நகை திருட்டு

image

சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே சாக்கோட்டையை சேர்ந்த பொினாபேகம் (45) என்பவர் நேற்று அறந்தாங்கியில் இருந்து சாக்கோட்டைக்கு பேருந்தில் பயணம் செய்தார். அறந்தாங்கி அருகே பச்சலூர் சோதனைசாவடி பகுதியில் பேருந்து சென்றபோது அவர் பையில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் திருடு போனதாக சத்தம் எழுப்பினார். பின் பேருந்த நிறுத்தி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் அவர் புகார் அளித்தார்.

Similar News

News October 28, 2025

புதுக்கோட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 28, 2025

புதுக்கோட்டை: தபால் துறையில் வேலை- ரூ.30,000 சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க<<>>.
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 28, 2025

புதுகை: குடும்ப சண்டையை தடுத்தவருக்கு கத்தி குத்து

image

விராலிமலை ஒன்றியம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32) நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்து அவரது மனைவி சோபனாவை தாக்கியுள்ளார். அப்போது வந்த சோபானாவின் சகோதரன் மாதவன் சதீஷ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாதவனை சலூன் கடை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருச்சி GH-ல் சேர்த்தனர். மாத்தூர் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!