News October 24, 2025
புதுக்கோட்டை: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

புதுகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு புதுகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04322-220585) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Similar News
News October 25, 2025
முதல்வரிடம் காசோலையை வழங்கிய அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து, தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் 2024-25ஆம் நிதியாண்டில் 52 கோடியே 72 இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்டியதில், 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த ஈவுத்தொகையான 10 கோடியே 39 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி காசோலையை வழங்கினார்.
News October 25, 2025
முதல்வருடன் கலந்துரையாடிய அமைச்சர் ரகுபதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கலந்துரையாடல் நடத்தினார். இந்த கலந்துரையாடல் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர், திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் கட்சியினர் என பலரும் கலந்து கொண்டனர்.
News October 24, 2025
புதுகை: தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர்

சென்னை அறிவாலயத்தில் நடந்த உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் திருமயம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆறு.சிதம்பரத்தை வரவழைத்து தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு. சிதம்பரம் முதல்வருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். உடன் திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் உள்ளனர்.


