News September 7, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News September 7, 2025
புதுகை: அவசரக்கால உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அவசரக்கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 04322-222207 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News September 6, 2025
பொன்னமராவதி: மருத்துவ முகாம்; ஆட்சியர் உத்தரவால் பந்தல்

பொன்னமராவதியில், தமிழக அரசின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தபோது, வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் காத்திருப்பதற்குப் போதிய இடவசதி இல்லாததால் சிரமப்படுவதைக் கண்டார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து, பொதுமக்கள் அமர்வதற்குப் பந்தல் அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, உடனடியாகப் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
News September 6, 2025
புதுக்கோட்டை: ஆயுதத் தொழிற்சாலையில் வேலை

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <