News February 26, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.25) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 26, 2026
மீனவர்களுக்கு ஊக்கத்தொகை – கலெக்டர் அறிவிப்பு!

கட்டுமாவடி முதல் ஏனாதி வரை தற்போது கடல் ஆமைகள் இனப்பெருக்க காலம் என்பதால், கடற்கரை நோக்கி ஆமைகள் வரும் போது மீனவர்கள் வலையில் கடல் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் சிக்கி இருந்தால் அதனை உடனே கடலில் விட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வலையில் சிக்கும் ஆமைகளை விடுதலை செய்யும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – கோர்ட் அதிரடி தீர்ப்பு

அறந்தாங்கியை சேர்ந்தவர் பண்ணீர்செல்வம்(55). இவர் கடந்த ஆண்டு ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அலங்குடி அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்து செய்தனர். இவ்வழக்கின் விசாரணை புதுகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததில், போக்சோ சட்டட்த்தின் கீழ் 20 ஆண்டுகள் தண்டை விதிக்கப்பட்டது.
News February 26, 2026
புதுக்கோட்டை: பைக் மீது மோதிய சரக்கு வாகனம் – ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் நீர்பழனி, கருதாங்கீப்பட்டியை சேர்ந்தவர் கோபால்(42). இவர் கீரனூர் – திருச்சி புறவழிச்சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலே கோபால் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய மாத்தினாம்பட்டியை சேர்ந்த கணேசன்(26) என்பவரை கைது செய்தனர்.


