News November 16, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 16, 2025
புதுகை: முதல்வரை சந்தித்த ஒன்றிய செயலாளர்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் உடன்பிறப்பே வா என்ற நிகழ்வின் மூலம் திமுக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சாமிநாதன் உடன் பிறப்பே வா என்ற நிகழ்வில் கலந்து கொண்டு, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அவருடைய தொகுதி பற்றி கலந்துரையாடினார்.
News November 15, 2025
ஆலங்குடி: பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்

ஆலங்குடி அரசு மருத்துவமனை எதிரே தியாகராஜன் என்பவருடைய கடலை மில் பகுதியில் திடீரென பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குடி தீயணைப்பு துறையினர் தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன் பிறகு பிடிபட்ட பாம்பை வனப்பகுதிகள் துறையினர் பத்திரமாக விட்டனர்.
News November 15, 2025
புதுகை: டிகிரி போதும்..பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <


