News October 16, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.15 இரவு 10 மணி முதல் இன்று (அக்.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News October 15, 2025

தொடர் மணல் திருட்டு: அதிகாரிகள் விரட்டிப் பிடிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, கருகாக்குறிச்சி கீழத்தெரு குரும்பிவயல் கிராமத்தில் அக்னி ஆற்றில் தொடர் மணல் திருட்டு தொடர்பாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், வட்டாட்சியர் ஜமுனா நேற்று இரவு நேர திடீர் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆற்று மணலை திருட்டு தனமாக மாட்டு வண்டியில் அள்ளிக் கொண்டிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார். மணலுடன் மாட்டு வண்டி வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News October 15, 2025

புதுக்கோட்டைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்ட, நாகை,மயிலாடுதுறை திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News October 15, 2025

புதுக்கோட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

image

தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டை இந்திய விடுதலைக்கு பின் மார்ச் 3, 1948-இல் இந்திய பேரரசுடன் இணைக்கப்பட்டு, திருச்சி மாவட்டத்தின் ஒரு கோட்டமாக விளங்கியது. பின்னர் ஜனவரி 14, 1974 அன்று திருச்சி மாவட்டத்தில் இருந்த முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!