News October 18, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 18, 2025
புதுகை: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
News October 18, 2025
புதுகை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணமேல்குடி சரக விஏஓ அளித்த புகாரின் பேரில் மணமேல்குடி காவல் துறையினர் இறந்த முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணமேல்குடி போலீஸ் சார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 18, 2025
புதுகை: தீபாவாளியொட்டி ரூ.2 கோடிக்கு விற்பனை!

புதுகை சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி ஆடுகளை வாங்குவதற்காக அதிகளவில் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் வெள்ளாடுகள், கிடா, செம்மறி ஆடுகள் உள்ளிட்டவை அதிகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு நாளில் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.