News February 2, 2025
புதுக்கோட்டை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 230 பேர் கைது

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளுடன், தூண்டியவா்களையும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நேற்று (பிப்.1) மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக கூறி அக்கட்சித் தலைவா் உள்பட 230 பேரை போலீசார் கைது செய்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 2, 2026
வைரிவயல்: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் வைரவயல் பகுதியில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் இன்று (மார்ச்.2) அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு இறந்தவர் யார்?, எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 2, 2026
புதுக்கோட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
புதுகை: சாலையை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் சாங்கிராப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு(60). இவர் சாங்கிராப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது,அவ்வழியாக பைக்கில் வந்த கார்த்திகேயன் அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தில், சின்னப்பொண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


