News September 14, 2024
புதுக்கோட்டை அருகே பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு

கீரமங்கலம் அடுத்த பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் அஜித் இன்ஜினியரிங் படித்துள்ளார். அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது துரதிஷ்டவசமாக பாம்பு கடித்ததில் இறந்து போனார். இது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 24 வயது இளைஞன் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News July 5, 2025
புதுக்கோட்டை: பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அழகன்வயலை சேர்ந்தவர் சத்யபிரியா (26). இவருக்கு திருமணம் ஆகி 3 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். கணவன் மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று மணமேல்குடி பாரதி நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்திய பிரியாவின் தந்தை அளித்த புகாரில் மணமேல்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 5, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News July 4, 2025
புதுக்கோட்டை: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <