News August 17, 2024
புதுக்கோட்டையில் டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பி ஆக இருந்த பால்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளைஞரணி மதுரை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 3, 2025
புதுகை: பசுமாடு மோதி தொழிலாளி பலி!

ஆலங்குடியைச் சேர்ந்தவர் சக்திவேல் (48), இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பசுமாட்டிற்கு சக்திவேல் தீவணம் வைத்து கொண்டிருந்தார். அப்போது மாடு எதிர்பாராதவிதமாக சக்திவேலை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 3, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.02) இரவு 10 மணி முதல் இன்று (நவ.03) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 2, 2025
புதுக்கோட்டை மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை வழியாக திருச்சி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் திருச்சியிலிருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் மறு மார்க்கமாக மானாமதுரையில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நாட்களில் வண்டி எண்: 16845, அதேபோல் வண்டி எண்: 16486, 16849 ஆகிய ரயில் வண்டிகளும் குறிப்பிட்ட தேதிகளில் இயங்காது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.


