News April 21, 2024
புதுக்கோட்டை:ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது!

புதுக்கோட்டை மாவட்டம் இளையாவயல் கிராமத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை ராணியார் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது வழியில் அதிகவலி ஏற்பட்டு நேற்று சுகப்பிரசவத்தில் ஆம்புலன்ஸிலேயே பெண்குழந்தை பிறந்தது. புதுகை ராணியார் மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.
Similar News
News October 28, 2025
புதுக்கோட்டை: தபால் துறையில் வேலை- ரூ.30,000 சம்பளம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 28, 2025
புதுகை: குடும்ப சண்டையை தடுத்தவருக்கு கத்தி குத்து

விராலிமலை ஒன்றியம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32) நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்து அவரது மனைவி சோபனாவை தாக்கியுள்ளார். அப்போது வந்த சோபானாவின் சகோதரன் மாதவன் சதீஷ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாதவனை சலூன் கடை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருச்சி GH-ல் சேர்த்தனர். மாத்தூர் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News October 28, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று (அக்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


