News December 28, 2025

புதுகை: மு. ஊராட்சி மன்ற தலைவர் கைது – ரூ.10 லட்சம் பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அருகே சட்டவிரோதமாக சிலர் சூதாடுவதாக அறந்தாங்கி போலீஸ் டிஎஸ்பி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய கிருஷ்ணாஜிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல்ஹமீது உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்து, சூதாட வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 2, 2026

புதுகை: இலவச ஓட்டுநர் பயிற்சி

image

புதுகை மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

புதுக்கோட்டை: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry

image

புதுக்கோட்டை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News January 2, 2026

புதுக்கோட்டை: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!