News December 21, 2024
புதுகை மாவட்டத்தில் நாளை மின்தடை

அண்ணாபண்ணை, அன்னவாசல், கறம்பக்குடி, திருமயம், விராச்சிலை, ராயவரம், புதுக்கோட்டை சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (டிச.21) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Similar News
News March 6, 2026
புதுக்கோட்டை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

புதுக்கோட்டை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
புதுக்கோட்டை: 190 பெண்கள் உட்பட 390 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 180 பெண்கள் உட்பட 390 பேரை போலீசார் கைது செய்தனர்.
News March 6, 2026
புதுக்கோட்டை: ஆட்சியர் அறிவிப்பு!

புதுக்கோட்டை ஆட்சியர் அருணா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அரசு மற்று தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தொழிற்பழகுனர் பயிற்சிக்கான முகாம் வரும் 9ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்று, தேர்வு செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளார்.


