News March 19, 2024
புதுகை: மாணவனை தாக்கிய போதை ஆசாமி- கைது

காட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிஹரன் (13). இவர் நேற்று வயலோகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சைக்கிளை நிறுத்தி விட்டு வந்த ஹரிஹரனை அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் மது போதையில் கட்டையால் தாக்கியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று ராமனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 5, 2025
புதுக்கோட்டை இரவு நேர ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (05.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News April 5, 2025
குறைகளை தீர்க்கும் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன்

புதுக்கோட்டை, விராலிமலை அருகில் இந்த மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனை ஊரின் காவல் தெய்வம் என கூறுகின்றனர். துன்பம் கொடுப்பவர்களையும், சொத்துக்களை அபகரித்தவர்களையும் தண்டிக்கும் சக்தி கொண்டவள் இந்த அம்மன். இங்கு நீராடி ஈரத் துணியுடன் அம்மன் முன் நின்று தங்கள் குறைகளைச் சொல்லி மனதார வேண்டினால் அதற்கான தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதை பகிரவும்
News April 5, 2025
பயன்படுத்திய பழைய நான்கு சக்கர வாகனம் ஏலம்

புதுக்கோட்டையில், உதவிஇயக்குநர் பயன்படுத்திய பழைய நான்கு சக்கர வாகனம் வரும் 15 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 11, 12 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி இயக்குநர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தினை பார்வையிடலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.