News October 24, 2025

புதுகை: மனைவியின் சகோதரரை கொலை செய்த கணவன்

image

கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த நடராஜன் (45) என்பவர் தஞ்சை, கபிஸ்தலம் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய அக்கா ராணி குடும்ப பிரச்சனை காரணமாக கணவர் சின்னதம்பியை பிரிந்து நடராஜனுடன் வசித்து வந்துள்ளார். ராணியை மீண்டும் சேர்ந்து வாழ சின்னதம்பி அழைத்தபோது, நடராஜன் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சின்னத்தம்பி, நடராஜனை துண்டினால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

Similar News

News October 25, 2025

முதல்வரிடம் காசோலையை வழங்கிய அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து, தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் 2024-25ஆம் நிதியாண்டில் 52 கோடியே 72 இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்டியதில், 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த ஈவுத்தொகையான 10 கோடியே 39 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி காசோலையை வழங்கினார்.

News October 25, 2025

முதல்வருடன் கலந்துரையாடிய அமைச்சர் ரகுபதி

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கலந்துரையாடல் நடத்தினார். இந்த கலந்துரையாடல் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர், திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் கட்சியினர் என பலரும் கலந்து கொண்டனர்.

News October 24, 2025

புதுகை: தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர்

image

சென்னை அறிவாலயத்தில் நடந்த உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் திருமயம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆறு.சிதம்பரத்தை வரவழைத்து தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு. சிதம்பரம் முதல்வருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். உடன் திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!