News October 13, 2025
புதுகை: மக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவல்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அருணா தலைமையில் இன்று(அக்.13) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமால் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பட்டா மாற்றம், கடன் உதவி உள்ளிட்ட மனுக்கள் பெற்று, அதற்கான தீர்வுகான அலுவர்களுக்கு உத்திரவுட்டார்.
Similar News
News October 13, 2025
புதுகை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுகை மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News October 13, 2025
புதுக்கோட்டை: வாகனம் மோதி விபத்து – இளைஞர் படுகாயம்

திருமயம் அருகே துளையானூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். திருமயம் மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின் ஆபத்தான நிலையில் இருக்கும் அவரை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
News October 13, 2025
புதுக்கோட்டையில் கொட்டித் தீர்த்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று (அக்.,14) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளத். அதன்படி, மழையூர் பகுதியில் 1.20 மி.மீ., கீழாநிலை 7.20 மி.மீ, திருமயம் 6.20 மி.மீ, அறந்தாங்கி 18.40 மி.மீ, ஆயங்குடி 82.40 மி.மீ, நாகுடி 18 மி.மீ, மணமேல்குடி 15.60 மி.மீ பதிவாகியுள்ளது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.