News October 16, 2025
புதுகை: பச்சிளம் குழந்தை பரிதாப பலி

புதுக்கோட்டை, தட்டாம்பட்டியில் இருந்து கீரனூருக்கு பழனிவேல்(57), கார்த்திகா (21), லக்ஷ்சனா ஸ்ரீ (3), இவர்களது 3 மாத குழந்தை பிரகதீஷ் 4 பேரும் சென்றுள்ளனர். அப்போது இளையாவயல் பேருந்து நிறுத்தம் அருகே அவர்களுக்கு பின்னால் காரில் வந்த சுப்பிரமணியன் (58) மோதியதில் 3 மாத ஆண் குழந்தை பிரகதீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 16, 2025
புதுகை: மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த கருக்காக்குறிச்சி பிள்ளையார் கோவில் அருகே, வீரபத்திரன் (33) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து கருக்கா குறிச்சி சரக விஏஓ ரமேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் வடகாடு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து மேலும் அவரிடமிருந்து 1/4 யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 16, 2025
புதுகை: இரண்டு புறக்காவல் நிலையங்கள் திறப்பு

விராலிமலை பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேகுப்தா அறிவுறுத்தலின் பேரில் செக்போஸ்ட், காமராஜர் நகர் 2 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஷிப்ட் அடிப்படையில் 4 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூடும் கூட்டங்களை கண்காணித்து சட்ட விரோத செயல்களில் யாரும் ஈடுபடுகிறார்களா என்று கண்காணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
புதுகை: அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் நேற்று அறந்தாங்கி அருகே உள்ள செட்டிக்காடு பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு மேலும் அவரிடம் இருந்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.