News April 13, 2025
புதுகை: ஜல்லிக்கட்டில் மாடுகுத்தி ஒருவர் உயிரிழப்பு

மழையூர் அருகே மீனம்பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 600 காளைகளும் 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்து வருகின்றனர். இந்நிலையில், பொற்பனை கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (23), போட்டியின்போது மாடு குத்தியதில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News February 14, 2026
புதுகை: SBI வங்கியில் வேலை-APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
புதுகை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
புதுகை: போதை மாத்திரை பயன்படுத்திய 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்திய அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரொக்கம் பணம், அவர்கள் பயன்படுத்திய மாத்திரை மற்றும் ஊசியை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


