News December 7, 2025

புதுகை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News December 9, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News December 8, 2025

புதுக்கோட்டை: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

image

புதுக்கோட்டை மக்களே உங்களுக்கு சட்ட உதவி தேவையா? இனி கவலை வேண்டாம். மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News December 8, 2025

இலுப்பூர்: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

இலுப்பூர் டவுன் சிப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று மற்றொரு இடத்திற்கும் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!