News November 11, 2025

புதுகை: சாலையை கடக்க முயன்றவர் மீது பைக் மோதல்

image

கரம்பக்குடி அடுத்த ரெகுநாதபுரம் அருகே பந்துவகோட்டையைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (53). இவர் அவரது வீட்டின் அருகில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே பைக்கில் வந்த நபர் மோதியதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வன் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

புதுகை மாவட்டத்தில் ஓர் புதிய அறிமுகம்!

image

புதுகை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கில் பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி பெற E-KYC அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பதை APT 2.0 திட்டத்தின் கீழ் QR குறியீடு மூலம் பெறலாம். காகிதமற்ற பண பரிவர்த்தனைகளை இதன் மூலம் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு, புதுகை மாவட்ட அஞ்சலக கூட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

புதுகை மக்களே இது முற்றிலும் இலவசம்!

image

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <>இங்கே கிளிக் செய்து<<>> அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

News November 11, 2025

புதுக்கோட்டை: பைக் மீது டிராக்டர் மோதி விபத்து

image

ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை முன்பு இருசக்கர வாகனத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்த நபரின் மீது அடையாளம் தெரியாத டிராக்டர் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்திய வருகின்றனர்.

error: Content is protected !!