News December 19, 2025
புதுகை: கோயிலுக்கு சென்ற கார் விபத்து – 4 பேர் படுகாயம்!

பட்டுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் (35), சதீஷ் (29), பாலசுப்பிரமணியன் (30), கார்த்திகை செல்வன் (25) ஆகியோர் சதுரகிரிக்கு ஒரு காரில் சென்றனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை சாலையில் அம்புலி ஆற்று பாலத்தில் கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியது. இதில் சென்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News December 19, 2025
புதுகை: வெள்ளி வென்ற அரசுப் பள்ளி மாணவன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த சிலட்டூர் அரசு பள்ளி மாணவன் மகேஸ்வரன், துபாயில் நடைபெற்ற ஆசியா அளவிலான பாரா பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இன்று போட்டியில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் வென்ற மாணவனுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
News December 19, 2025
JUST IN: புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 பேர் நீக்கம்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் மொத்தம் 13,94,112 வாக்காளர்கள் முன்பு இடம்பெற்றிருந்தனர். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தற்போது 1,39,587 பேர் நீக்கப்பட்டு 12,54,525 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 6,24,511 நபர்களும், பெண் வாக்காளர்கள் 6,32,967 நபர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 நபர்களும் இடம் பெற்றுள்ளனர்.
News December 19, 2025
புதுகை: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


