News January 27, 2026

புதுகை: குடியரசு தினத்தன்று சட்டவிரோத செயல் – 2 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் நேற்று மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் காவல்துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் பாரில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 104 மது பாட்டில்களை, பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.

Similar News

News February 13, 2026

புதுகை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை.<> PM-JAY<<>> செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

புதுக்கோட்டை: கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அடுத்த கரகத்திக்கோட்டை மஞ்சக்குடி சாலையில் நேற்று இத்ரீஸ் கான் (28), இம்ரான் கான் (30), முகமது அப்துல்லா (28) ஆகிய மூவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 13, 2026

புதுகை: 16-ம் தேதி கடைசி நாள்-கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு கணினி பிரிவு அல்லது 3 மாத கால கணினி பயிற்சி பெற்று ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்ற 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்.16-க்குள் இணை இயக்குநர், தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பூ மாலை வணிக வளாகம், புதுகை-5 என்ற விலாசத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!