News January 20, 2026
புதுகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு சமூக இணைப்பு மற்றும் உடல் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் விதமாக 22.01.26 ஆம் தேதி முதல் 08.02.26 வரை ஊராட்சி ஒன்றிய அளவில் மாவட்ட அளவில் “நம்ம ஆட்டம்” 2026 போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியை சிறப்பாக புதுகை மாவட்டத்தில் அரசு அலுவலர்களும் அனைவரும் உடனிருந்து பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News February 15, 2026
புதுக்கோட்டை: விபத்தில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலிருந்து விராலிமலைக்கு நேற்று மருதமுத்து (31) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது இலுப்பூர், மேலப்பட்டி சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஒட்டி வந்த சுப்பிரமணியன் (46) மோதியதில் மருதமுத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 15, 2026
புதுக்கோட்டை: கழுத்தை அறுத்து கொலை – கைது

புதுகை காட்டு மாரியம்மன் கோயில் அருகே வசித்து வந்தவர் மோகன்ராஜ் (36). சம்பவத்தன்று மோகன்ராஜ் வீட்டிற்கு வந்த மர்ம நபர் அரிவாளால் மோகன்ராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து புதுகை எஸ்.பி அபிஷேக் குப்தா குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று கரூர் அருகே பதுங்கி இருந்த குற்றவாளி விஷ்வா (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News February 15, 2026
புதுகை: போதை ஊசி பயன்படுத்திய 3 பேர் கைது

அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையில் (பிப்ரவரி 13) அறந்தாங்கி அங்காளம்மன் கோயில் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு போதை ஊசி வைத்திருந்த ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.


