News October 18, 2025

புதுகை: ஒரே நாளில் 650 கிலோ புகையிலை பறிமுதல்!

image

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து புதுகை மாவட்டத்துக்கு கடத்தி செல்வதாக இலுப்பூர் போலீஸ் துணை சூப்பி ரண்டு திவ்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மொத்தம் 650 கி புகையிலை இருப்பது தெரியவர 2 பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்

Similar News

News December 9, 2025

புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

புதுக்கோட்டை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 9, 2025

1,40,640 பேர் நீக்கம்; புதுக்கோட்டை ஆட்சியர் பகீர் தகவல்! .

image

புதுகை மாவட்டத்தில் SIR பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் வேளையில் 1,40,640 பேர் நீக்கப்பட்ட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அக்.27 வரை ஆண்கள் 6,86,457, பெண்ர்கள் 7,07,597, மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 58 என மொத்தம் 13,94,112 வாக்காளர்கள் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT!

error: Content is protected !!