News January 12, 2026

புதுகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுக்கோட்டை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 3, 2026

புதுகை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

புதுகை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் <>App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

புதுக்கோட்டை: நூதன முறையில் பணம் அபேஸ்!

image

ஆலங்குடியைச் சேர்ந்த தனசேகரன் (35) என்பவரை கடந்த ஜன.29-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் பிரபல தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நகைக்கடன் குறித்து கேட்டு 16 இலக்க எண், OTPயை கேட்டுள்ளார். அதன் பேரில் இவரும் கூறியுள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.4.70 லட்சம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!