News March 21, 2024

புதுகை அருகே மீன்பிடித் திருவிழா கோலாகலம்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூ திருவிழா மற்றும் அக்னி பால்குட திருவிழாவை முன்னிட்டு கொன்னைப்பட்டி கொன்னை கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தா தூரி கச்சா இவைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துச் சென்றனர்.

Similar News

News December 30, 2025

புதுகை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News December 30, 2025

புதுகை: கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி!

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முகமது இப்ராஹிம்(18) முகமது(18). இவர்கள் திருமயம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்துவந்த 2 பேரும் தேர்வெழுதிவிட்டு நேற்று டூவீலரில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருமயம் சாலையில் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது லாரியின் பின்பகுதியில் மோதியதில் பலத்த காயமடைந்த 2 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News December 30, 2025

புதுகை: சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்!

image

ஆலங்குடியைச் சேர்ந்தவர் சண்முகம் (77). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் ஆலங்குடி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மட்டையன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (53) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சண்முகம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

error: Content is protected !!