News September 23, 2024
புதுகையில் 1900-ல் வந்த நிலநடுக்கம்

08.02.1900 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இது 30 வினாடி தொடர்ந்து இருந்தது, ஆனால் அழிவுகள் ஏதும் ஏற்படவில்லை. 26.12.2004 தமிழகத்தை சுனாமி தாக்கிய பொழுது, புதுக்கோட்டை அருகே குடுமியான்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாறை குளங்களில் லேசாக அதிர்ந்தது, ஆனால் அது நிலநடுக்கம் இல்லை என பின்னர் தெரிய வந்தது.
Similar News
News November 7, 2025
புதுகை: 150 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு!

பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 150 கிலோ புகையிலை பொருட்களை நீதிமன்ற உத்தரவுபடி நேற்று தேனூர்- தேனி கண்மாய் அருகே பொன் னமராவதி தாசில்தார் சாந்தா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர், பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News November 7, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (நவ.07) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெரும் கறம்பக்குடி, நரங்கிப்பட்டு, தீத்தான்விடுதி, பிலாவிடுதி, கறம்பவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.06) இரவு 10 மணி முதல் இன்று (நவ.07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


