News February 24, 2026
புதுகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

புதுகை மாவட்ட நிர்வாகம் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுகை மன்னர் கல்லூரியில் வரும் பிப்.28ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை நடக்கிறது. இதில் தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதால், இதில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலை தேடுவோர் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, உள்ளிட்டவற்றுடன் வரவேண்டும் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News February 28, 2026
புதுக்கோட்டை: 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

புதுகை, பரம்பூர் வீரப்பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் ராதா(17). பரம்பூர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவருக்கு, தீவிர வயிற்று வலி ஏற்பட்டதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட வீட்டினர் அவரை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாக உரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News February 28, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News February 27, 2026
புதுக்கோட்டை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

புதுக்கோட்டை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


