News March 22, 2024

புதிரை வண்ணார் மக்களின் அடிப்படை கணக்கெடுப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புதிரை வண்ணார் மக்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றி கணக்கெடுப்பு ஐபிஎஸ்ஒஎஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து புதிரை வண்ணார் இன மக்களும் கணக்கெடுப்பில் தவறாது கலந்துக்கொண்டு தங்களைப் பற்றிய அனைத்து தகவலையும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.

Similar News

News October 26, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை, பாய்ந்தது போக்சோ

image

கிருஷ்ணகிரி, நரால்சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (35) பரோடா மாஸ்டர். இவருக்கு சோனியா மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் 9 வயது சிறுமிக்கு பட்டாசு வாங்கி கொடுப்பதாக கூறி தனிமையில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் மத்தூர் போலிசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் குணசீலனை போக்சோவில் கைது செய்தனர்.

News October 26, 2025

கிருஷ்ணகிரி: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

image

கிருஷ்ணகிரி மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 26, 2025

கிருஷ்ணகிரி: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம்<> விண்ணப்பிக்கலாம்.<<>> ஷேர்!

error: Content is protected !!