News September 3, 2025
புதிய ரயில் பாதை திட்டங்கள் முடக்கம்: அன்புமணி குற்றச்சாட்டு.

திண்டிவனம் – திருவண்ணாமலை உள்ளிட்ட புதிய ரயில் பாதை திட்டங்களை, தெற்கு ரயில்வே கிடப்பில் போட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். நிலம் கையகப்படுத்தாமை மற்றும் நிதி ஒதுக்கீடு குறைபாடுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டங்களை விரைவில் செயல்படுத்த மாநில அரசு பங்காற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
Similar News
News November 19, 2025
விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

விழுப்புரம் கே கே ரோடு சாலையில் விழுப்புரம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரண்டு நபர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து விசாரித்த போலீசார் விழுப்புரம் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தமிழ்ச்செல்வன் என்பது அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்த நிலையில் அவர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2025
விழுப்புரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
விழுப்புரம்:விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு!

வெங்கடேசன் தனது மோட்டார் சைக்கிளில் சூரியபிரியாவை நேற்று (நவ.18) காலையில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செஞ்சி – விழுப்புரம் நெடுஞ்சாலையில், பூண்டி அருகே சென்றபோது எதிரே விழுப்புரத்திலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், சூரியபிரியா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த கஞ்சனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை


