News October 13, 2025
புதிய பேருந்துகள் தொடக்க விழா அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்பு

இன்று (அக்.13) இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரூ.2.79 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தாழ்தள புறநகர் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா, திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 14, 2025
ராணிப்பேட்டை மாவட்டதில் 17ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17ம் தேதியன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.முகாமில் 8ம் வகுப்பு முதல் 10ம்,12ம் வகுப்பு,பட்டப்படிப்பு,ஐடிஐ,டிப்ளமோ நர்சிங் மற்றும் பிஇ முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.எனவே வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 13, 2025
636 மனுக்கள் ஆட்சியரிடம் குவிந்தது மக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.13 ம் தேதி மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். வேலைவாய்ப்பு, பட்டா மாறுதல், மின் இணைப்பு, குடும்ப அட்டை என மொத்தம் 636 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News October 13, 2025
ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் இன்று (அக் 13) மோசடிக்காரர்கள் பட்டாசு விற்பனையில் அதிக தள்ளுபடி தருவதாக ஆசை வார்த்தை கூறி வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முன் பணமோ அல்லது தங்களது முழு தகவலையோ பகிர்ந்து ஏமாற வேண்டாம்.இது மோசடியாக இருக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது