News November 29, 2024

புதிய சுற்றுலா மாளிகை கட்டும் பணி ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலத்தில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சுற்றுலா மாளிகை கட்டும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், புதிய சுற்றுலா மாளிகை கட்டிடப் பணிகளை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News December 9, 2025

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை?

image

நாட்டார்மங்கலத்தை சேர்ந்த சகி கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6-ம் தேதி பல்கலை தேர்விற்கு செல்போன் எடுத்து சென்றதால் பேராசிரியர் கண்டித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து கல்லூரியில் இருந்து சென்றவர் கோட்டைமேடு பகுதியில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வீசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி சென்ற பைக் மீது கார் மோதி விபத்து

image

உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா வயது (32). இவர் தனது மாமனார் சாமிதுரை என்பருடன் வேப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஏழு மாத கர்ப்பிணியான சுகன்யா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு முதல் இன்று (டிச.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!