News December 17, 2024

புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

image

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 250க்கும் மேற்பட்ட மீனவ படகுகள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பான கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News August 5, 2025

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

News August 5, 2025

செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

image

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

image

செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <>இந்த லிங்கில்<<>> சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதன் மூலம் பெயர் சேர்க்கை, நீக்கம் & உங்கள் முகவரியை மாற்றம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க! <<17309403>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!