News October 23, 2024

புகையிலை விற்பனை செய்த 80 கடைகளுக்கு அபராதம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கண்டறியப்பட்ட 80 கடைகளும் பூட்டப்பட்டது. கடைகளுக்கு ரூ.21 லட்சத்து 25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார். புகையிலை பொருட்கள் விற்கப்பட்டால் 9444042322 என்ற வாட்சப் எண்ணில் புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தினார். 

Similar News

News February 8, 2026

திருப்பூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் (08.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 8, 2026

திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

image

திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக் காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை, வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பங்குனி திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.

News February 8, 2026

திருப்பூர்: இனி Whats app மூலம் வரி செலுத்தலாம்

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம். (SHARE)

error: Content is protected !!