News August 18, 2025

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

image

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சமீர் அலாம்(34) என்பதும், அவரிடம் 2 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 5, 2026

திருப்பூர்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

திருப்பூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 5, 2026

திருப்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!

image

செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன் (65). இவர் வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் காசிராஜன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளாள். சிறுமியை திருப்பூர் GH-ல் அனுமதித்தார். திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் காசிராஜனை போக்சோவில் கைது செய்தனர்.

News April 5, 2026

திருப்பூர்: தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வரும் 23ம் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேதி சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட தொழில்துறை உதவி கமிஷ்னர் காயத்ரி அறிவித்துள்ளார். மாவட்ட தொழிலாளர்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, புகார் செய்யலாம் என்றார். 9443021877, 9944258037, 9952142578.

error: Content is protected !!