News July 8, 2025

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிப்பு

image

வில்லியனூரை தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்றார்.அவர் கடனை திரும்பி செலுத்திய பின்னரும் ஆன்லைன் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.மேலும் அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்திலும் அவரின் உறவினருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுத்து ரூபாய் 8,838 பெற்றனர் .அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Similar News

News August 24, 2025

புதுவை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

புதுவையில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 04132251691 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 24, 2025

விநாயகர் சதுர்த்தி; வழிகாட்டுதல் வெளியீடு

image

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில் வணிகர்கள், பொதுமக்கள். விழா குழுவினர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவில் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களால் ஆன அலங்கார பொருட்கள் மற்றும் நெகிழி பைகளை தவிர்த்து சுற்றுசூழலை பாதுகாக்குமாறும் ரசாயனம் பூசிய விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்

News August 24, 2025

புதுவை மக்களே உஷார்… போலீசார் எச்சரிக்கை!

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், App மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி, உங்கள் புகைபடத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக உங்களுக்கு குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்து தருகிறோமென ஆசை வார்த்தை கூறினால் முதலீடு செய்யாதீர்கள் என எச்சரித்துள்ளனர். SHARE IT.

error: Content is protected !!