News March 21, 2024

புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. எனவே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை 9655220100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

ஈரோடு: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எண் 0424-2210898 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். (SHARE பண்ணுங்க)

News December 31, 2025

BREAKING: கொடிவேரி அணையில் ஒருவர் உயிரிழப்பு

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்காட்டு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. அவரது நண்பர் ஆறுமுகம். இருவரும் கொடிவேரி அணையில் பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஆறுமுகம் கரையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு செல்வதற்குள் கருப்புசாமி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 31, 2025

கோபிசெட்டிபாளையம் அருகே சோகம்

image

கோபி, கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவர் வேலைக்கு செல்ல வசதியாக பெற்றோரிடம் பைக் கேட்டு வந்தார். 2 ஆண்டுகள் கழித்து வாங்கி தருவதாக கூறியுள்ளனர். கடந்த, 28-ம் தேதி வைத்தீஸ்வரனிடம், பெற்றோர் கூலிப்பணம் கேட்டுள்ளனர். அவரோ, பைக் வாங்கி தந்தால்தான், பணம் தருவேன் என்று கூற விரைவில் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் வீட்டு படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!