News November 11, 2024
புகார் அளிக்க மாநகர காவல்துறையினர் எண் வெளியீடு

மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைகளில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். படிக்கும் வயதிலுள்ள சிறார்களை பள்ளிக்கு அனுப்புவது நமது கட்டாய பொறுப்பாகும். விதியை மீறி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைகளில் அமர்த்துவதை அறிந்தால் பொதுமக்கள் உடனே 83000-21100 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
மதுரையில் EB கட்டணம் அதிகமா வருதா?

மதுரை மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
News December 11, 2025
திருமங்கலம் டோல்கேட் கொலை சம்பவம்: முதியவரும் பலி

திருமங்கலம் கப்பலூரில் நேற்று முன்தினம் இரவு கல்யாண் குமார் 19. மது போதையில் தகராறு செய்து அவ்வழியாக சென்ற போஸை 75 அரிவாளால் வெட்டினார், பின்னர் டோல்கேட்டில் தனியார் பஸ் கண்டக்டர் அழகர்சாமியிடம் டைம் கேட்டு தகராறு செய்து வெட்டியதில் அவர் இறந்தார். கல்யாண் குமார் கைதான நிலையில், நேற்று சிகிச்சையில் இருந்த போஸ் இறந்தார். கல்யாண் குமார் மீது போலீசார் இரட்டை கொலை வழக்கு பதிவு செய்தனர்.
News December 11, 2025
மதுரை: ஜப்தி செய்யப்பட்ட கார்; இளைஞர் தற்கொலை.!

மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (30) சொந்தமாக கார் வாங்கி ஓட்டுவதற்காக, கே.கே. நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு கடந்த 6 மாதமாக தவணை கட்டாததால் பைனான்ஸ் அதிகாரிகள் காரை ஜப்தி செய்து விட்டனர். இதன் காரணமாக மனமுடைந்த கார்த்திக் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
செய்து கொண்டார். சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


