News May 30, 2024
பீர் பாட்டிலால் தாக்கியதில் தொழிலாளி பலி

கோயம்பேட்டில் நேற்று இரவு பணி முடித்து மதுபோதையில் சேகர் என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே மார்க்கெட்டில் பணிபுரியும் சக்தி மதுபோதையில் அவரது நண்பரை பார்க்க வந்த போது தவறுதலாக சேகரை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சேகர் சக்தியை அவதூறாக பேசியதால் சக்தி அருகே கிடந்த பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News May 8, 2025
சென்னை: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 8, 2025
முதல் 5 இடங்களை பிடித்த அரசு பள்ளிகள்

முதல் 5 இடங்களை பிடித்த மாநகராட்சி பள்ளிகள்: நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் பள்ளி 95.59 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
News May 8, 2025
சென்னையின் அடையாளம் ‘எழும்பூர் மியூசியம்’

1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எழும்பூரில் உள்ள மெட்ராஸ் அருங்காட்சியகம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகும். இது, கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக 2ஆவது பழமையான அருங்காட்சியகமாகும். சோழர், விஜயநகரம், ஹொய்சலா மற்றும் சாளுக்கியர் உட்பட அனைத்து முக்கிய தென்னிந்திய காலத்தையும் குறிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு கன்னிமாரா பொது நூலகமும் உள்ளது.