News November 16, 2025
பிஹார் தோல்வி ஏன்? ஜன் சுராஜ் விளக்கம்

CM நிதிஷ்குமார் அரசு உலக வங்கியிலிருந்து கிடைத்த ₹14,000 கோடி நிதியை தேர்தலில் வெற்றி பெற பயன்படுத்திவிட்டதாக ஜன் சுராஜ் தேசிய தலைவர் உதய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதனை வைத்தே இலவசங்களை அறிவித்ததாகவும், இப்பணம் இல்லை என்றால் NDA தோற்றிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜன் சுராஜ் வாக்காளர்களில் சிலர் RJD ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதென பயந்து NDA-க்கு வாக்களித்ததாகவும் பேசியுள்ளார்.
Similar News
News November 16, 2025
மூன்று திசைகளில் பார்வையை பதித்த விஜய்

SIR-க்கு எதிராக தவெக சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 2-ம் கட்ட தலைவர்களை களமிறக்கியுள்ளார் விஜய். தலைநகர் சென்னையில் புஸ்ஸி ஆனந்த், கொங்கு மண்டலமான கோவையில் அருண்ராஜ், தென்மண்டலமான மதுரையில் நிர்மல்குமார் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 2-ம் கட்ட தலைவர்கள் அனைத்து பகுதிகளையும் கவர் செய்யவும், கட்சியினருக்கு நம்பிக்கை அளிக்கவும் விஜய் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
News November 16, 2025
பிரபல நடிகை மரணம்.. நடிகர் கண்ணீருடன் இரங்கல்

மறைந்த பழம்பெரும் நடிகை <<18284857>>காமினி<<>> குறித்து நடிகர் சாகித் கபூர் எமோஷனலாக பேசியுள்ளார். கபீர் சிங் படத்தில் காமினியுடன் நடித்த அனுபவங்களை நினைவுக்கூர்ந்த சாகித், அவருடன் பணிபுரிந்தது ஒரு பாக்கியம் என கூறியிருக்கிறார். மேலும் காமினி ஒரு அற்புதமான கலைஞராக எப்போதும் நினைவுகூரப்படுவார் எனவும், அவர் மிகவும் கனிவானவர் மற்றும் அன்பானவர் என்றும் சாகித் கபூர் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
தவெக + காங்., கூட்டணியா? செல்வப்பெருந்தகை பதில்

தவெக உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக எழுந்த பேச்சுகளுக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். ராகுல் காந்தியும், விஜய்யும் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாகவும், கூட்டணி குறித்து ஆலோசிப்பதாகவும் வரும் தகவல்கள் பொய் என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இவையெல்லாம், தனிப்பட்ட லாப நோக்கத்திற்காக சிலர் கிளப்பிவிடும் தகவல்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


