News November 18, 2025
பிஹாரில் எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்?

பிஹாரில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் அதிகளவில் பாஜகவினர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவை சேர்ந்த 16 பேருக்கு, JDU-வை சேர்ந்த 14 பேருக்கு, சிராஜ் பாஸ்வான் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய கூட்டணிகளான அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.
Similar News
News November 18, 2025
நாகை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
நாகை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 18, 2025
மாவோயிஸ்ட் முக்கிய தளபதி என்கவுன்ட்டர்

ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில், மாவோயிஸ்ட்களின் முக்கிய தளபதி ஹிட்மா, அவரது மனைவி உயிரிழந்தனர். பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹிட்மா, 26 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். ஆயுதங்களை கையாள்வது, பழுதுபார்ப்பதில் கை தேர்ந்தவரான இவரை பற்றி தகவல் தெரிவித்தால், ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


