News November 11, 2025
பிஹாரில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா?

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. சாணக்யா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக-ஜேடியுவின் NDA கூட்டணி 130 முதல் 138 இடங்கள் வரை வெல்லும் என கணிக்கப்படுகிறது. தேஜஸ்வி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 100 முதல் 108 இடங்களையும், மற்றவை 3-5 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது. 2 கூட்டணிக்கும் இடையே 30 இடங்களே வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 11, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசு வழங்கும் பணியை அரசு இப்போதே தொடங்கிவிட்டது. இன்னும் 4 நாள்களில்(நவ.15 முதல்) ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் நடைபெற உள்ளது. மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம்.
News November 11, 2025
கண்களில் காவியம் சேலையில் ஓவியம்: கயல் ஆனந்தி

‘கயல்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்தவர் ஆனந்தி. இதனாலேயே அவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரும் வந்தது. நேர்த்தியான நடிப்பு, அழகான புன்னகை என ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார். இவர் சமீபத்தில், இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்களில் கலை வடிவமாக ஒளிர்கிறார். கண்களில் காவியமாகவும், சேலையில் ஓவியமாகவும் உள்ளார். இந்த போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 11, 2025
8-வது முறையாக முதல்வராகிறாரா நிதிஷ்?

பிஹார் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி நிதிஷ் குமார் 8-வது முறையாக அம்மாநில CM ஆக பொறுப்பு ஏற்பார் என தெரிகிறது. ஏற்கெனவே பிஹாரில் அதிக நாள்கள் CM அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமை கொண்ட நிதிஷ் குமார், BJP, RJD என மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறார். அவர் 1996-ல் இருந்து ஒருமுறை கூட சட்டமன்ற தேர்தலில் களம் கண்டதில்லை. சட்டமேலவை உறுப்பினராகவே இதுவரை நீடித்து வருகிறார்.


